- குந்தாஸ்
- கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு
- Guruparapalli
- தின மலர்
கிருஷ்ணகிரி, ஏப்.26: கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், குருபரப்பள்ளி மேம்பாலம் அருகில், கடந்த 10ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 பிக்அப் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 4 டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ் (எ) மெர்சல் (34) மற்றும் 18, 17 வயதுடைய 2பேர் என மொத்தம் 3பேரை போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு கடத்தியது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 4 டன் ரேஷன் அரிசி மற்றும் 2 பிக்அப் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய கோவிந்தராஜ், தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால், அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து கோவிந்தராஜை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார்.
The post ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.
