
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக எஸ்டேட் மேலாளர் நடராஜன் சிபிசிஐடி முன் ஆஜரானார். கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரிடம் கடந்த ஆண்டு வாக்குமூலம் பெறப்பட்டது. வழக்கில் முதல்முறையாக கோடநாடு ஜெயலலிதா எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
The post கோடநாடு வழக்கு – எஸ்டேட் மேலாளர் விசாரணைக்கு ஆஜர் appeared first on Dinakaran.
