திருவள்ளூர்: பொன்னேரி அருகே சின்னக்காவனத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக கோயிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மாற்று இடம் ஒதுக்கி கோயிலை அரசே கட்டித் தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post பொன்னேரி அருகே கோயிலுக்கு மாற்று இடம் கோரி பொதுமக்கள் பேரணி!! appeared first on Dinakaran.
