காவேரிப்பட்டணம், பிப்.21: ஒன்றிய அரசின் மும்மொழி கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி காவேரிப்பட்டணம் நகர செயலாளர் சாஜித் தலைமையில், திமுக உறுப்பினர்கள் தங்கள் வீடுகளின் முன்பாக இந்தியை திணிக்காதே, எங்கள் கல்வி, எங்கள் உரிமை என்ற வாசகத்தை வாசலில் எழுதியதுடன், திணிக்காதே திணிக்காதே, மோடி அரசே, ஒன்றிய அரசே ஆதிக்க இந்தியை திணிக்காதே, இதை வன்மையாக கண்டிக்கிறோம் என ேகாஷமிட்டனர்.
The post இந்தியை திணிக்காதே… வாசலில் வாசகம் எழுதி ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.
