×

ஆதனூர் ஊராட்சியில் ஆயுதபூஜை விழாவில் நலத்திட்ட உதவி

 

கூடுவாஞ்சேரி, அக்.14: ஆதனூர் ஊராட்சியில் ஆயுத பூஜை விழா கோலாகலமாக கொண்டாட்டது. இதில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு திமுக ஊராட்சி மன்ற தலைவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சியில், ஆதனூர், டிடிசி நகர், பலராமபுரம், லட்சுமிபுரம், கொருக்கன்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆதனூர் திமுக ஊராட்சி மன்ற தலைவரும், பிரபல தொழிலதிபருமான தமிழ்அமுதன் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்கள், அலுவலர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோருக்கு பொரி, ஸ்வீட், பழங்கள், பாத்திரங்கள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வி ரவி, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேசன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post ஆதனூர் ஊராட்சியில் ஆயுதபூஜை விழாவில் நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Tags : Ayuda Pooja ,Adanur panchayat ,Kuduvancheri ,Ayuda Puja festival ,DMK Panchayat Council ,President ,Kanchipuram District ,Guduvancheri ,Kunradthur Union ,in ,Ayuda Puja ceremony ,Dinakaran ,
× RELATED வாலிபர் தூக்கிட்டு தற்கொலை