×

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், பட்ரவாக்கம் அடுத்த தேனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் ராஜேஷ் (31). இவர் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், ராஜேஷ் அமணம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இதில், காதலித்த பெண் காதலன் ராஜேஷை திருமணம் செய்து கொள்ள கூறியுள்ளார். அதற்கு ராஜேஷ் மறுத்ததால் அந்த பெண் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தன்னை நான்கு ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், ராஜேஷை விசாரணைக்கு காவல் நிலையத்திற்க்கு நேரில் வர சொல்லியுள்ளனர்.

இந்நிலையில், விசாரணைக்கு கூப்பிட்டதால் நேற்று காலை அச்சமடைந்த ராஜேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதை அவரது சகோதரர் நரேந்திரகுமார் மற்றும் அவரது பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ராஜேஷ் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ராஜேஷ் சகோதரர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையத்திற்க்கு விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chandran ,Thenur ,Patravakkam ,Rajesh ,Kuduvancheri ,Amanambakkam ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்