×

மாமியாரை தாக்கிய மருமகன் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி சாஸ்திரி நகர் அண்ணா சாலை பகுதியில் வசித்து வருபவர் சசிகலா (48). இவரது மகள் ப்ரீத்தி, கெனித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் சசிகலாவின் கணவர் ஆரோக்கிய செல்வராஜ் தூக்கிட்டு செய்து கொண்டார். இதன் காரணமாக சசிகலா தனது மகள் மற்றும் மருமகனுடன் பேசாமல் தனியாக தனது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ப்ரீத்திக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதனை தெரிவிப்பதற்காக மருமகன் கெனித் மற்றும் அவரது தந்தை ஜேசுதாஸ் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் சசிகலா வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மருமகன் கெனித் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தை பிறந்த தகவலை கூறியதும் சசிகலா உங்களால் தான் எனது கணவர் இறந்தார் எனக்கூறி அவர்களை வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கெனித் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் சேர்ந்து சசிகலா மற்றும் அவரது மகனை தாக்கி உள்ளனர். இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் வியாசர்பாடி சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த கெனித் (26) மற்றும் அவரது தந்தை ஜேசுதாஸ் (53) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post மாமியாரை தாக்கிய மருமகன் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Sasikala ,Vyasarpadi Shastri Nagar Anna Road ,Preeti ,Kenith ,Arogya Selvaraj ,
× RELATED ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: மர்ம நபருக்கு வலை