×

விழுப்புரம் கோட்டம் சார்பில் வார இறுதி நாட்களில் 410 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விழுப்புரம், ஆக. 23: விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (23ம் தேதி), நாளை(24ம் தேதி) ஆகிய வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள் என்பதால், அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக இன்று 165 மற்றும் நாளை 165 என மொத்தம் 330 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஓசூர், புதுச்சேரி இசிஆர் வழி, திருவண்ணாமலைக்கு ஆற்காடு, ஆரணி மற்றும் காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக கூடுதலாக இன்று 40 பேருந்துகளும், நாளை 40 என மொத்தம் 80 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளது.எனவே பயணிகள் https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து சிறப்பு பேருந்துகளை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் பயணிகள் கூட்டம் குறையும்வரை தேவைக்கேற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விழுப்புரம் கோட்டம் சார்பில் வார இறுதி நாட்களில் 410 சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Villupuram division ,Villupuram ,Villupuram Division Government Transport Corporation ,Klambakum ,Kallakurichi ,Cuddalore ,Chidambaram ,Vruthathachalam ,Thiruvannamalai ,Polur ,
× RELATED விழுப்புரம் கோட்டம் சார்பில் 740 சிறப்பு பேருந்துகள் இயக்கம்