×

3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியக்கோடி திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட கல்வி அலுவலர் சுவாமிமுத்தழகன் திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் ஏ.ஏஸ்.அமுதா விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. நெல்லை முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி மாநில கல்வியில் ஆராய்ச்சி பயிற்சி இயக்க துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post 3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு: பள்ளிக்கல்வித்துறை appeared first on Dinakaran.

Tags : of ,Chennai ,School Education ,Ponneri ,District Education Officer ,Punniakodi ,Dindigul District ,Ariyalur ,Dinakaran ,
× RELATED கல்வி தொலைக்காட்சியில் போட்டித்...