×

டிவி தொடர் படப்பிடிப்பின்போது பிரபல மலையாள நடிகைகள் கைகலப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் டிவி தொடர் படப்பிடிப்பின் போது நடிகைகளான ரஞ்சினி, சஜிதா பேட்டி ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. திருவனந்தபுரம் வெள்ளாயணி பகுதியிலுள்ள ஒரு வீட்டில் மலையாள தனியார் தொலைக்காட்சிக்காக தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதில் முதல் மரியாதை படத்தில் நடித்த ரஞ்சினி மற்றும் பிரபல மலையாள நடிகை சஜிதா பேட்டி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் வழக்கம்போல படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென நடிகைகள் ரஞ்சினி மற்றும் சஜிதா பேட்டி ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டது.தகராறு முற்றி கைகலப்பு வரை சென்றது. அதிர்ச்சியடைந்த டைரக்டர் மற்றும் கலைஞர்கள் விரைந்து செயல்பட்டு அவர்களை விலக்கினர்.இதனால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த டிவி தொடரின் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் ஆகியோர் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் இருவரும் சமரசம் செய்ய முன் வராததால் அன்றைய படப்பிடிப்பு முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு நேற்று மீண்டும் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் ஆகியோர் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று மதியத்திற்குப் பின்னர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

The post டிவி தொடர் படப்பிடிப்பின்போது பிரபல மலையாள நடிகைகள் கைகலப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Ranjini ,Sajitha Petty ,Vellayani ,
× RELATED மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது வழக்குப்பதிவு