×

செங்கல்பட்டு மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை

செங்கல்பட்டு, ஜூலை 26: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று மாலை திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை வருவதற்கான அறிகுறிகளுடன் குளிர் வானிலை நிலவியது. தொடர்ந்து, இரவு 7 மணியளவில் சாரல் மழை பொழிவு தொடங்கிய நிலையில் திடீரென்று பலத்த சூறைக்காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதனால், மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu district ,Chengalpattu ,Chennai Meteorological Department ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடுவீடாக...