×

அவதூறு வழக்கு.. நாளை கோர்ட்டில் ஆஜராகுகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி..!!

லக்னோ: அவதூறு வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை கோர்ட்டில் ஆஜராகுகிறார். கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி அப்போதைய பாஜக தலைவரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. பாஜக பிரமுகர் விஜய் மிஸ்ரா என்பவர் உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு கடந்த பிப்ரவரி 20ம் தேதி கோர்ட்டு ஜாமின் வழங்கியது.

இந்த வழக்கில் ஜூலை 26ம் தேதி வாக்கு மூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து அவதூறு வழக்கில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாளை ஆஜராகுகிறார். இதை காங்கிரஸ் மாவட்ட தலைவர் அபிஷேக் சிங் ராணா இன்று தெரிவித்தார். காலை 9 மணிக்கு ராகுல் காந்தி லக்னோ விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து அவர் சுல்தான்பூர் சென்று கோர்ட்டில் ஆஜராகுகிறார் என அவர் கூறியுள்ளார்.

The post அவதூறு வழக்கு.. நாளை கோர்ட்டில் ஆஜராகுகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி..!! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Lucknow ,Rahul ,BJP ,president ,Union ,home minister ,Amit Shah ,Dinakaran ,
× RELATED எளிய மக்களுடன் ராகுல் காந்தி..!!