×

பெருநிறுவன முதலாளிகளை குஷிப்படுத்தும் பட்ஜெட்: ராகுல் குற்றச்சாட்டு

ஒன்றிய நிதிநிலை அறிக்கை குறித்து காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தன் ட்விட்டர் பதிவில், “நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் சாமானிய மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. அது பெருநிறுவன முதலாளிகளை குஷிப்படுத்தும் விதமாக உள்ளது. மற்ற மாநிலங்களின் பணத்தில் பாஜ கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு வெற்று வாக்குறுதிகளை அளித்துள்ளது. மேலும் காங்கிரசின் முந்தைய நிதிநிலை அறிக்கை, தேர்தல் அறிக்கைகளை காப்பி பேஸ்ட் செய்து 2024-25 நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டி உள்ளார்.

The post பெருநிறுவன முதலாளிகளை குஷிப்படுத்தும் பட்ஜெட்: ராகுல் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Rahul ,Congress Lok Sabha ,Rahul Gandhi ,Nirmala Sitharaman ,Dinakaran ,
× RELATED எளிய மக்களுடன் ராகுல் காந்தி..!!