×

நிரம்பும் கே.ஆர்.எஸ். அணை: வெள்ள அபாய எச்சரிக்கை


பெங்களூரு: கே.ஆர்.எஸ். அணை எந்த நேரத்திலும் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் கர்நாடக நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது. 124.80 அடி உயரமுள்ள கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 117.20 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. பகல் 12 மணி நிலவரப்படி அணைக்கு 45,091 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 10,000 கனஅடி முதல் 25,000 கனஅடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹேமாவதி அணைக்கு 35,871 கனஅடியும் ஹாரங்கி அணைக்கு 13,118 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

The post நிரம்பும் கே.ஆர்.எஸ். அணை: வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : K. R. S. ,Bangalore ,K. R. ,Karnataka Water Department ,K. R. S. Dam ,Dinakaran ,
× RELATED பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர் குத்திக்கொலை ..!!