×

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அரசுக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: மின்சார கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின்சார கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் மின் அமைச்சக வழிகாட்டுதலின் படி, விநியோக முறையை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசின் நிதியை பெற ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்த வேண்டும் எனும் முன் நிபந்தனையின் அடிப்படையில் இது நடந்திருப்பதாக விளக்கம் அளித்திருக்கிறது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் அனைத்து வகை மின் பயனிட்டாளர் கட்டணம் குறைவாக இருந்தபோதினும் தற்போதைய மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வு திரும்பப் பெற வேண்டும். மின்கட்டண உயர்வின் காரணமாக சிறு, குறு நிறுவனங்களும் வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அரசுக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Jawahirulla ,Chennai ,Majority Leader ,Jawahirullah ,Humanist People's Party ,M. H. ,MLA ,Tamil Nadu Power Generation and Sharing Corporation ,Dinakaran ,
× RELATED முஸ்லிம்கள் சி.ஏ.ஏ. சட்டத்தில் கைது...