×

அவதூறாக அறிக்கை வெளியிடக்கூடாது கவர்னருக்கு எதிராக பேச முதல்வர் மம்தாவுக்கு தடை: கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புதிய எம்எல்ஏக்கள் 2 பேர் பதவி ஏற்பு தொடர்பாக கவர்னர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தாவுக்கும் இடையே மோதல் எழுந்தது. இதுதொடர்பான அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி முதல்வர் மம்தா மற்றும் 2 எம்எல்ஏக்கள் மீது கவர்னர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணாராவ் பானர்ஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் மம்தா மற்றும் 2 எம்எல்ஏக்கள் கவர்னர் ஆனந்த போசுக்கு எதிராக ஆக.14 வரை தவறாக எந்த கருத்தும், அறிக்கையையும் வெளியிடக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.

The post அவதூறாக அறிக்கை வெளியிடக்கூடாது கவர்னருக்கு எதிராக பேச முதல்வர் மம்தாவுக்கு தடை: கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CM ,Mamata ,Governor ,Kolkata High Court ,Kolkata ,Ananda Bose ,Chief Minister ,Trinamool Congress ,West Bengal ,Dinakaran ,
× RELATED ஏற்கனவே எழுதிய கடிதத்துக்கு பதில்...