×

குஜராத்தை அச்சுறுத்தும் சண்டிபுரா வைரஸ்: 4 குழந்தைகள் பலி, 2 குழந்தைகளுக்கு சிகிச்சை

ஹிமத்நகர்: குஜராத்தில் சண்டிபுரா வைரஸ் தாக்குதலுக்கு 4 குழந்தைகள் பலியாகினர். 2 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தை சேர்ந்த ஒரு குழந்தை, ஆரவல்லி மாவட்டத்தை சேர்ந்த 2 குழந்தைகள் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த 1 குழந்தை உள்பட 4 குழந்தைகள் சண்டிபுரா வைரஸ் தாக்குதலால் கடந்த 10ம் தேதி உயிரிழந்து விட்டனர்.

ராஜஸ்தானை சேர்ந்த மேலும் 2 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சபர்கந்தா மாவட்ட தலைமை சுகாதார அதிகாரி ராஜ் சுதாரியா கூறியதாவது, “இறந்த 4 குழந்தைகள், சிகிச்சை பெறும் 2 குழந்தைகள் உள்பட 6 பேரின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

The post குஜராத்தை அச்சுறுத்தும் சண்டிபுரா வைரஸ்: 4 குழந்தைகள் பலி, 2 குழந்தைகளுக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Himatnagar ,Sandipura ,Gujarat ,Sabarkanda district ,Aravalli district ,Rajasthan ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் கடற்படை ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து: 3பேர் மாயம்