×

தீ விபத்து நடந்த பள்ளி மூடல் குஜராத் அரசு நடவடிக்கை

அகமதாபாத்: குஜராத்தில் உள்ள தனியார் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பள்ளியை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தின் போபால் பகுதியில் சாந்தி ஏசியாடிக் என்ற பெயரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், 5 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தால் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். ஆனால் பள்ளி நிர்வாகம் அதை ஒத்திகை என்றும் இதற்காக பள்ளியில் இருந்த மாணவர்கள் அனைவரும் அங்கு இருந்து வெளியேற்றப்பட்டனர் என்று விளக்கம் அளித்தது. இதை நம்பாத மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இது பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட கல்வி அதிகாரி பள்ளியை மூட உத்தரவிட்டார்.

The post தீ விபத்து நடந்த பள்ளி மூடல் குஜராத் அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Gujarat Govt ,AHMEDABAD ,Gujarat ,Shanti Asiatic ,Bhopal, Ahmedabad, Gujarat ,Gujarat government ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் கடலோர காவல்படையின்...