×

பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருக்க 2 நாள் சிறப்பு விடுப்பு: அசாம் அரசு அறிவிப்பு

கவுகாத்தி: அசாம் முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில், ‘‘2024ம் ஆண்டு நவம்பர் 6 மற்றும் 8ம் தேதிகளில் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. வயதான பெற்றோர் மற்றும் மாமனார், மாமியார் உடன் நேரத்தை செலவிடுவதற்காக மட்டும் தான் இந்த விடுப்பை பயன்படுத்த முடியும். வயதானவர்களைளை கவுரவப்படுத்தவும், மதிக்கவும், பராமரிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக பயன்படுத்த முடியாது. பெற்றோர் அல்லது மாமனார், மாமியார் இல்லாதவர்கள் இந்த விடுப்பை பெற இயலாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருக்க 2 நாள் சிறப்பு விடுப்பு: அசாம் அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Assam Govt ,Guwahati ,Twitter ,Assam ,Chief Minister ,Assam government ,Dinakaran ,
× RELATED அசாமில் சிறுமி கூட்டு பாலியல்...