×

கடத்தல்காரர்களுக்கு அனுமதி அட்டை வழங்கிய ஒன்றிய அமைச்சர்: எம்பி மஹூவா மொய்த்ரா குற்றச்சாட்டு

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா தனது டிவிட்டர் பதிவில் ஒன்றிய அமைச்சர் சாந்தனு தாகூர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அத்துடன், இந்திய-வங்கதேச எல்லையில் கடத்தல்காரர்களுக்கு அனுமதி அட்டையை வழங்கியுள்ளார். இதன் காரணமாக 3 கிலோ மாட்டிறைச்சியை கடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு அமைச்சர் சாந்தனு தாகூர் கூறுகையில், “மஹூவா மொய்த்ராவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஏன் ஒருவர் 3கிலோ மாட்டிறைச்சியை மட்டும் கடத்துகிறார்? இதுஅபத்தம் இல்லையா? உள்ளூர் பிரச்னைகளை எளிதாக்குவதற்காக எல்லையில் இதுபோன்ற அனுமதி அட்டைகள் வழங்கப்படுவது அவருக்கு தெரியும். இந்த உண்மையை அவர் வேண்டுமென்றே மறைத்துவிட்டார்” என தெரிவித்துள்ளார்.

The post கடத்தல்காரர்களுக்கு அனுமதி அட்டை வழங்கிய ஒன்றிய அமைச்சர்: எம்பி மஹூவா மொய்த்ரா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union minister ,Mahua Moitra ,KOLKATA ,Trinamool Congress ,Shantanu Tagore ,Indo-Bangladesh ,Dinakaran ,
× RELATED 3 மாதத்தில் ‘ஸ்லீப்பர்’ வசதியுடன்...