×

சட்டீஸ்கரில் பெண் நக்சல் சுட்டு கொலை

கன்கேர்: சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையின்போது பெண் நக்சல் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். சட்டீஸ்கரின் கன்கேர் மாவட்டம் சோட்டே பெத்தியா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பினகுண்டா கிராமத்துக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. இந்த சம்பவத்தில் பெண் நக்சல் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து துப்பாக்கி உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

The post சட்டீஸ்கரில் பெண் நக்சல் சுட்டு கொலை appeared first on Dinakaran.

Tags : naxals ,Chhattisgarh ,Naxal ,Pinakunda ,Chote Pethya police station ,Kanker district ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கரில் 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை..!!