×

நண்பர் மீது ஆசிட்டை ஊற்றிய வெள்ளிப்பட்டறை தொழிலாளி

சேலம், மே3: சேலம் செவ்வாய்பேட்டை நரசிம்மசெட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவரது நண்பர் ராவணேஸ்வரர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (27). இருவரும் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வருகிறார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவு இருவரும் அங்குள்ள ரயில்வே தண்டவாள பகுதியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, ரமேஷ், தங்கராஜிடம் வாக்கு வாதம் செய்து கொண்டு கையால் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ் வீட்டுக்கு சென்று வெள்ளி பட்டறையில் பயன்படுத்தப்படும் சல்பர் ஆசிட்டை எடுத்து வந்து ரமேஷ் மீது ஊற்றி விட்டு அங்கிருந்து தப்பினார்.

ஆசிட் உடலில் பட்டதும், ரமேஷ் அலறினார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி செவ்வாய்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post நண்பர் மீது ஆசிட்டை ஊற்றிய வெள்ளிப்பட்டறை தொழிலாளி appeared first on Dinakaran.

Tags : Silversmith ,Salem ,Ramesh ,Narasimhasetty Road, Sewwaipet, Salem ,Thangaraj ,Ravaneswarar ,
× RELATED நண்பர் தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்ற தொழிலாளி