×

ஒன்றிய அரசில் தீவிரமாக வேலை செய்யும் 2 துறை ஈ.டி., ஐ.டி: பாலகிருஷ்ணன் விளாசல்

தென்காசி: இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து மார்க்சிஸ்ட் சார்பில் சங்கரன் கோயிலில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: அதிமுக பல அணியாக உடைந்து கிடக்கிறது. ஒன்றிய அரசில் இந்தியாவில் பல்வேறு துறைகள் இருந்தாலும் இரண்டு துறைகள் மட்டும் தான் தற்போது வரை தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்று அமலாக்கதுறை, மற்றொன்று வருமான வரித்துறை. எதிர்க்கட்சிகளை இந்த துறைகள் மூலம் ஒன்றிய அரசு எப்படியாவது அழித்து விடலாம் என்று கனவு காண்கிறது. அது வெறும் பகல் கனவு.
இவ்வாறு அவர் பேசினார்.

The post ஒன்றிய அரசில் தீவிரமாக வேலை செய்யும் 2 துறை ஈ.டி., ஐ.டி: பாலகிருஷ்ணன் விளாசல் appeared first on Dinakaran.

Tags : 2 Dept. ED ,Union Govt ,Balakrishnan Vilasal ,Tenkasi ,Sankaran temple ,Marxists ,DMK ,Rani Sreekumar ,Lok Sabha ,India Alliance ,Marxist ,Balakrishnan ,AIADMK ,
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...