×

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழா

 

தம்மம்பட்டி, மார்ச் 12: கெங்கவல்லி ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக ஆசிரியர்கள் வீடு வீடாகச்சென்று 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இதுவரை 252பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கான மாணவர் சேர்க்கை விழா, தம்மம்பட்டி(மெயின்)நடுநிலைப்பள்ளி, நாகியம்பட்டி நடுநிலைப்பள்ளி மற்றும் 8வது வார்டு தொடக்கப்பள்ளி ஆகிய 3பள்ளிகள் சார்பாக தம்மம்பட்டி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
கெங்கவல்லி வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீனிவாஸ் தலைமை வகித்தார். பிடிஏ தலைவர் பழனிமுத்து, தலைமையாசிரியர்கள் அன்பழகன், ராமகிருஷ்ணன், சடையம்மாள், ஹரிஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணித ஆசிரியர் கமலக்கண்ணன் வரவேற்றார். இதில் மூன்று பள்ளிகளிலும் முதல் வகுப்புகளில் சேர்ந்த 100 குழந்தைகளை வரவேற்று கிரீடம் அணிவிக்கப்பட்டு, சிலேட், அரிச்சுவடி வண்ணப்புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. சேலம் மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) சந்தோஷ் வாழ்த்தி பேசினார்.

The post அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழா appeared first on Dinakaran.

Tags : Dammampatti ,Kengavalli ,Dhamambatti (Main) Middle School ,Nagyambatti Middle School ,Ceremony in ,Schools ,
× RELATED விஷ தேனீக்கள் அழிப்பு