×

தெப்ப தேர்த்திருவிழா

 

இடைப்பாடி, மார்ச் 11: இடைப்பாடி அருகே செட்டிமாங்குறிச்சியில் உள்ள ஒட்டப்பட்டி அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி ஆனந்த கல்யாண சுந்தரேசுவர் கோயிலில் மாசி திருவிழாவையொட்டி நேற்று தெப்ப திருவிழா நடைபெற்றது. இதில், அங்காளம்மனுக்கு பால் அபிஷேகம், சந்தனம், இளநீர், மஞ்சள் அபிஷேகம் சிறப்பு அலங்காரம், தீபாராரனை நடைபெற்றது. தொடர்ந்து தெப்ப தேர்த்திருவிழா நடைபெற்றது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, நாமக்கல் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

The post தெப்ப தேர்த்திருவிழா appeared first on Dinakaran.

Tags : Theppa election ceremony ,Ethapadi ,Masi festival ,Ottapatti Anna Anandayi Angala Parameswari Ananda Kalyana Sundareswar temple ,Chettimangurichi ,Angalamman ,
× RELATED இடைப்பாடி அருகே சுட்டெரிக்கும் வெயிலுக்கு 10 ஆயிரம் வாழை கருகியது