×

மருத்துவமனை பெண் ஊழியர் மாயம்

சேலம்: சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த பிஎஸ்சி பட்டதாரியான 26 வயது இளம்பெண் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பலஇடங்களில் தேடியும் கிடைக்காததால் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், சென்னை தாம்பரத்தை சேர்ந்த இளங்கோ என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

The post மருத்துவமனை பெண் ஊழியர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Astampatti ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...