×

கல்லூரி பேராசிரியர் வீட்டில் நகை திருட்டு

சேலம், பிப்.7: சேலம் மாவட்டம், ஓமலூர் பக்கமுள்ள கோட்டகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சத்யராஜ்(35). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில், உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். திருமணமாகாத இவர், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு, வீட்டை பூட்டி விட்டு, அருகில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தார். அந்நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரரான வீரமணி என்பவர், அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது சத்யராஜ் வீட்டிலிருந்து 3 பேர் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து சத்யராஜூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்த பார்த்த போது, வீட்டில் உள்ள பொருட்கள் கலைந்த நிலையில் அங்கிருந்த அரை பவுன் மோதிரம் மட்டும் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பூட்டை உடைத்து மோதிரத்தை திருடிச் சென்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

The post கல்லூரி பேராசிரியர் வீட்டில் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Salem ,Satyaraj ,Kotakoundambatti ,Omalur ,Namakkal ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...