×

முதியவரை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது

சேலம், ஜன.7: மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு மும்பை மல்லாடு பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (86). இவர், ஆத்தூர் மந்தைவெளி பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 1ம் தேதி சாலையில் நடந்துச் சென்றபோது, அவரை 2 பேர் வழிமறித்தனர். பின்னர், அவரை தாக்கி பையில் வைத்திருந்த ₹500 பணத்தை பறித்துக் கொண்டு தப்பினர். இதுபற்றி ஆத்தூர் டவுன் போலீசில் முதியவர் சந்தானம் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், முதியவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது, மந்தைவெளி கலைவாணர்தெருவை சேர்ந்த துரையன் (32), தெற்கு மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்த சக்கரபாணி (30) எனத்தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post முதியவரை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Santhanam ,West Mumbai ,Malladu ,Maharashtra ,Athur Mantaivela ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...