![]()
சென்னை: சென்னையில் மழை வெள்ள சேதத்தை ஹெலிகாப்டர் மூலம் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்து வருகிறார். ராஜ்நாத் சிங்குடன் ஹெலிகாப்டரில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோரும் உடன் செல்கின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய குழுவை அனுப்ப தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிலையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்கிறார்.
The post சென்னையில் மழை வெள்ள சேதத்தை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்து வருகிறார் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்..!! appeared first on Dinakaran.
