×

தமிழ்நாட்டில் பழங்குடியினர் நலனைக் காக்க ஆன்றோர் மன்றம் திருத்தி அமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணையின், பிரிவு 4(1)-இன்படி, தமிழ்நாட்டில் பழங்குடியினர் நலனைக் காக்க தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்களை தலைவராகக் கொண்டும் 3 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள். 2 பழங்குடியின சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய 13 அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் 2 பழங்குடியினரல்லாத அலுவல் சாரா உறுப்பினர்கள் கொண்டு தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் திருத்தி அமைத்து அரசாணை (நிலை) எண்.165, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(பமே.1(2))துறை, நாள்:30.11.2023-இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் மாநிலத்திலுள்ள பழங்குடியினர்களின் நலன் மற்றும் அவர்களது முன்னேற்றத்திற்காக ஆலோசனைகளை அரசிற்கு வழங்கும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்

The post தமிழ்நாட்டில் பழங்குடியினர் நலனைக் காக்க ஆன்றோர் மன்றம் திருத்தி அமைத்து அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...