×

திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் 3 மணி நேரம் நடந்த சோதனை நிறைவு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என்.சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் 3 மணி நேரம் நடந்த சோதனை நிறைவு பெற்றது. மணல் குவாரி முறைகேடு தொடர்பாக திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவருடைய மைத்துனர் கோவிந்தன் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் கடந்த செப்டம்பர் 12ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நடத்தப்பட்ட சோதனையில், தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் இருந்து முக்கியமான ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர்.

அதன்படி இன்று காலை ஜி.டி.என்.சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் 2வது முறையாக மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ரத்தினத்தின் உறவினரான கரிகாலன் என்பவரது வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியது. மேலும் மணல் குவாரி ஒப்பந்ததாரரான ராமச்சந்திரனின் முதுப்பட்டினம் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்கள், மணல் குவாரி ஒப்பந்ததாரரான ராமச்சந்திரனின் முதுப்பட்டினம் வீட்டில் 3 மணி நேரம் நடந்த சோதனை நிறைவு பெற்றது.

 

The post திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் 3 மணி நேரம் நடந்த சோதனை நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Ratnam ,Dindigul GTN Road ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...