×

இன்ஜி. பட்டதாரிகள் சுய மரியாதை திருமணம்

சேலம்: சேலம் மன்னார்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்கமல். பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர் விவசாயம் செய்து வருகிறார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் வைஷாலி. இவர் பிடெக் படித்துள்ளார். இவர்கள் இருவரும் கரூரில் நடந்த விவசாய நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தனர். பின்னர் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்தனர். இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களது காதலுக்கு ராஜ்கமலின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவு செய்தனர். இதையடுத்து பெண்ணின் தாயார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் முன்னிலையில் கருப்பு உடை அணிந்து டவுன் பகுதியில் உள்ள பாரதியார் சிலைக்கு ராஜ்கமல், வைஷாலி ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் இருவரும் மாலையை மாற்றி திருமணம் செய்துகொண்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று அவர்களை வாழ்த்தி பேசினர். பின்னர் இருவரும் கலெக்டர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.

 

The post இன்ஜி. பட்டதாரிகள் சுய மரியாதை திருமணம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Rajkamal ,Mannarpalayam, Salem ,Dharmapuri District… ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்ததால் சோகம்..!!