×

தொழிலாளியை தாக்கிய கும்பல்

சேலம்: சேலம் பள்ளப்பட்டி அருகே ராமேஸ்வரா நகரை சேர்ந்தவர் தாமோதரன் (49). தொழிலாளியான இவர் தீபாவளி சீட்டு நடத்தி வருகிறார். இவருக்கும் டவுன் பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு பழைய பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை பகுதியில் தாமோதரன் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த காயத்ரி மற்றும் அவரது கணவர் அருள் உள்பட 10பேர் தாமோதரனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கினர். அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கிவிட்டனர். இதனிடையே படுகாயமடைந்த தாமோதரன் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் இரவு 11மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். அவரை டவுன் போலீசார் சமாதானப்படுத்தி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து இதுபற்றி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொழிலாளியை தாக்கிய கும்பல் appeared first on Dinakaran.

Tags : Salem ,Damodaran ,Rameswara ,Pallapatti, Salem ,Diwali ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...