×

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப நேரிடும்: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

மதுரை: நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப நேரிடும் என ஐகோர்ட் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. நீதிமன்றத்தை ஏமாற்ற நினைக்காதீர்கள்; நீதிமன்றத்திற்கு சக்தி இல்லை என கருதாதீர்கள் என நீதிபதி பட்டு தேவானந்த் தெரிவித்துள்ளார். தற்காலிக ஊழியர்கள் அதிகாரிகளிடம் பிச்சை கேட்கவில்லை; செய்த பணிக்கு உரிய ஊதியம் மட்டுமே கேட்கின்றனர். தற்காலிக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியத்தை தாமதிப்பது, வழங்க மறுப்பது நல்ல செயல் அல்ல என நீதிபதி குறிப்பிட்டார். மதுரை மாவட்டம் வேடர்புளியங்குளத்தை சேர்ந்த கனகசுந்தர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

The post நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப நேரிடும்: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madurai ,ICourt branch ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...