×

பெரியாண்டாங்கோயில் பகுதியில் புதர் மண்டிக்கிடக்கும் பூங்கா

கரூர், செப்.21: கரூர் மாவட்டம் பெரியாண்டாங்கோயில் புதர்கள் மண்டிக்கிடக்கும் பூங்காவை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளிலும், கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா அமைக்கப்பட்டது. ஒரு சில பகுதிகளில் உடற்பயிற்சி மையத்துடன் கூடிய பூங்கா வளாகம் அமைக்கப்பட்டது. இதேபோல், பெரியாண்டாங்கோயில் பகுதியிலும் பூங்கா வளாகம் அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த பூங்கா பயன்பாட்டில் இருந்தது.

இந்நிநிலையில், பெரியாண்டாஙகோயில் பகுதி பூங்கா வளாகம் போதிய பராமரிப்பின்றி மிகவும் மோசமடைந்தது. பூங்கா வளாகத்தை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து மோசமாக உள்ளது. விளையாட்டு உபகரணங்களும் பழுதடைந்துவிட்டது. எனவே, இந்த பூங்கா வளாகத்தை புதுப்பித்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

The post பெரியாண்டாங்கோயில் பகுதியில் புதர் மண்டிக்கிடக்கும் பூங்கா appeared first on Dinakaran.

Tags : Bushy park ,Periandangoil ,Karur ,Periandango ,Karur Corporation ,Kneeling Park ,Dinakaran ,
× RELATED கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு