நாகை: வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். பல படகுகளில் சென்ற 11 மீனவர்கள் மீது கத்தி, கம்பி, கட்டையை பயன்படுத்தி இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 6 பேர் படுகாயம், 75 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வழிப்பறி செய்துள்ளனர். ஆறுகாட்டுத்துறையில் இருந்து தென்கிழக்கே 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
The post தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் appeared first on Dinakaran.
