×

மாரியம்மன் கோயிலுக்கு வந்த பெண்ணிடம் 3 பவுன் அபேஸ்

சேலம், ஆக. 10: நாமக்கல் மாவட்டம் மோகனூர் மணப்பள்ளியை சேர்ந்தவர் சரஸ்வதி(50). இவரது மகள் வீடு, சேலம் பெரிய கொல்லப்பட்டியில் உள்ளது. மாரியம்மன் பண்டிகைக்கு சேலத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சரஸ்வதி வந்துள்ளார். பின்னர் நேற்று கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த சரஸ்வதி, சாமி தரிசனத்தை முடித்து விட்டு கோயிலுக்கு வெளியே வந்து நின்றார். அப்போது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி அங்கு தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. நகையை மர்மநபர்கள் திருடியது தெரிந்தது. இதுகுறித்து சரஸ்வதி டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மாரியம்மன் கோயிலுக்கு வந்த பெண்ணிடம் 3 பவுன் அபேஸ் appeared first on Dinakaran.

Tags : Boun Abbeys ,Mariamman Temple ,Salem ,Ka ,Saraswathi ,Mokanur Bride School ,Namakkal District ,Boun ,
× RELATED மது, கஞ்சா போதையில் வாலிபர்கள் ரகளை