×

தென்கொரியாவில் பல்பொருள் அங்காடியில் இளைஞர் கத்தியால் தாக்குதல்.. ஒருவர் பலி.. 12 பேர் படுகாயம்

சியோல் : தென்கொரியாவில் பல்பொருள் அங்காடியில் இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் படுகாயம் அடைந்தனர். தலைநகர் சியோலில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள Seongnam என்ற இடத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் கொடூர நிகழ்வு அரங்கேறி உள்ளது. Seongnam ரயில் நிலையம் அருகே உள்ள கடையில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி கொண்டு இருந்தனர். அப்போது உள்ளே நுழைந்த இளைஞர், கண் இமைக்கும் நேரத்தில் கத்தியால் தாக்கினார்.
தாக்குதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக காரில் வந்த அந்த இளைஞர் நடந்து சென்றவர்கள் மீது அதிவேகமாக மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தாக்குதல் நடத்திய நபரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 20 வயதான அந்த இளைஞர் டெலிவெரி பாய் -ஆக வேலை செய்து வருவதாகவும் அவருக்கு மனரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

The post தென்கொரியாவில் பல்பொருள் அங்காடியில் இளைஞர் கத்தியால் தாக்குதல்.. ஒருவர் பலி.. 12 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : South Korea ,Seoul ,
× RELATED ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக...