×

திருப்பூரில் தற்காலிக பூ மார்க்கெட் கடைகளை காலி செய்ய மாநகராட்சி நோட்டீஸ்

திருப்பூர்: திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தற்காலிக பூ மார்க்கெட் கடைகளை 17ம் தேதிக்குள் காலி செய்ய மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் பெருமாள் கோயில் அருகே தினசரி பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பூ மார்க்கெட் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது. இதற்காக தற்காலிக பூ மார்க்கெட் பல்லடம் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் செயல்பட்டு வந்தது.  புதிய பூ மார்க்கெட் கட்டுமான பணிகள் நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தற்காலிக பூ மார்க்கெட் வியாபாரிகள் கடைகளை காலி செய்யாமல் உள்ளனர். புதிய பூ மார்க்கெட் கடைகளை ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர் தரப்பில், ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.

கோர்ட்டு உத்தரவுப்படி, புதிய பூ மார்க்கெட்டில் கடைகள் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி உதவி கமிஷனர் தங்கவேல்ராஜன் மற்றும் ஊழியர்கள் காட்டன் மார்க்கெட் வளாகத்துக்கு சென்று அங்குள்ள தற்காலிக பூ மார்க்கெட்டில் அறிவிப்பு நோட்டீசை ஓட்டினர். இந்த நோட்டீசில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தற்காலிக பூ மார்க்கெட்டின் தற்காலிக மின் இணைப்புகளை வருகிற 17ம் தேதி நிரந்தரமாக துண்டிப்பு செய்யப்பட உள்ளது. அதற்குள். கடைகளை காலி செய்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.

The post திருப்பூரில் தற்காலிக பூ மார்க்கெட் கடைகளை காலி செய்ய மாநகராட்சி நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Tiruppur Cotton Market ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...