- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலையியல் ஆய்வு மையம்
- வானிலையியல் ஆராய்ச்சி நிலையம்
- வானிலை ஆய்வு நிலையம்
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: 5 நாட்களுக்கு வெயிலின் உக்கிரம் தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனீ, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தென் இநித்ய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணங்க கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
மத்திய வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் இன்று சூறாவளி வீச வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் நாளை முதல் மேலும் 5 நாட்களுக்கு வெயிலின் உக்கிரம் தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
The post தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: 5 நாட்களுக்கு வெயிலின் உக்கிரம் தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
