![]()
புதுடெல்லி: நாடு முழுவதும் விமானப் பயணிகளின் பயணத்தை எளிதாக்குவதற்கான ஆலோசனை கூட்டம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்தது. இதில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, உள்துறை, விமானப் போக்குவரத்து துறைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கோடைக்காலத்தில் விமான நிலையங்களில் கேட், கவுண்டர்களில் பயணிகளை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் பயணத்தை எளிதாக்கும் வகையில் கூடுதல் நடவடிக்கைகளை விமான நிலையங்கள் மேற்கொள்ள அமித் ஷா அறிவுறுத்தினார்.
The post அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தல் விமான பயணத்தை எளிதாக்க கூடுதல் நடவடிக்கை appeared first on Dinakaran.
