
மாமல்லபுரம்: உலக பாராம்பரிய தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம், முழுவதும் ஏப்ரல் 18ம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களிடையே தங்களது சமூக கலாச்சார பாரம்பரியத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இது, மேலும் பாராம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுகிறது. இதையொட்டி, இன்று 18ம் தேதி ஒரு நாள் மட்டும் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாமல்லபுரம் புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்கலாம் என ஒன்றிய தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க பொதுமக்களுக்கு இன்று இலவசம் appeared first on Dinakaran.
