×

வழிப்பாதை நிலம் ஆக்கிரமிப்பு அளவீடு

இளம்பிள்ளை, ஏப்.14: கல்பாரப்பட்டியில் அம்மன் கோயில் வழிப்பாதை ஆக்கிரமிப்பு புகாரின் பேரில், நிலம் அளவீடு செய்யப்பட்டது. அரியானூர் அடுத்த கல்பாரப்பட்டி கிராமம், அம்மன் கோயில் காடு பகுதியில், பழமை வாய்ந்த சாமுண்டியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு உண்டான வழிபாதை நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இது குறித்து கல்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த சோலையப்பன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதன்படி இந்து அறநிலையத்துறை (சேலம்) தனி தாசில்தார் பாலாஜி, கோயில் தக்கார் பிரேமா மற்றும் வருவாய் துறையினர், போலீசார் முன்னிலையில் நேற்று அளவீடு செய்யப்பட்டது. இந்த அளவீடு சரியானதாக இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து மீண்டும் மேல் முறையீடு செய்ய உள்ளனர்.

The post வழிப்பாதை நிலம் ஆக்கிரமிப்பு அளவீடு appeared first on Dinakaran.

Tags : Yumappillai ,Amman ,Kalbarapatti ,Aryanur ,Kalbarapatti… ,Dinakaran ,
× RELATED மரக்காணம் திரவுபதி அம்மன் கோயில்...