×

ஈச்சங்கோட்டை ஊராட்சியில் நம்மஊரு சூப்பரு திட்டத்தில் சிறப்பு தூய் மைபணி

தஞ்சாவூர், ஆக.23: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஈச்சங்கோட்டை ஊராட்சியில் சிறப்பு சுகாதார முகாம் “நம்ம ஊரு சூப்பரு\” என்ற திட்டத்தின் செயல்பாட்டினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததாவது: முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க ஊரகப் பகுதிகளில் தூய்மையான குடிநீர், சுகாதாரம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை ஆகியவை தொடர்பான விழிப்பணர்வினை ஏற்படுத்திடவும் அதன் மூலம் \”நம்ம ஊரு சூப்பரு\” முகாம்கள் நடத்தி ஊரகப்பகுதிகளில் தூய்மையை பராமரித்திடவும், தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்கிடவும் அதன் மூலம், சுகாதாரம்,உற்பத்தி திறன், பாதுகாப்பு மற்றும் கண்ணியம் ஆகிய வாழ்விற்கு முக்கியமாக தேவையானவற்றை உயர்த்துவதற்கும் தேவையான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி முதற்கட்டமாக 20.8.2022 முதல் 2.9.2022 முடிய ஊரகப்பகுதிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடிகள் மற்றும் அரசுக்கட்டிடங்களில் முகாம்கள் நடத்தி தூய்மையை பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தினசரி மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விபரங்களை \”நம்ம ஊரு சூப்பரு\” திட்டத்தின் பயனடையும் இதர பங்காளர் துறைகளான தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டம், பள்ளிக்கல்வி, உயர்க்கல்வி, வருவாய்த்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், சமூக நலம், வனத்துறை, உணவுப்பாதுகாப்பு, சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை, பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றையும் ஒருங்கிணைத்து

முகாம்களை நடத்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நம்ம ஊர் சூப்பர் முகாமில் பொதுநிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் தூய்மைபணிகள் (மாஸ்கிளீனிங்) மேற்கொள்ளுதல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடிநீர், சுகாதாரம்,கழிவு மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வு முகாம், சுய உதவிக்குழுக்கள் உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் வீடுகளில் குடிநீர், சுகாதாரம்,கழிவு மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வு முகாம்,ஓர முறை பயன்படுத்தப்பட்டு தூக்கிஎரியப்படும் நெகிழிபொருளினை தடைசெய்து அதற்குமாற்றாக \”மீண்டும் மஞ்சப்பை\” பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தூய்மையான மற்றும் பசுமையான கிராமங்கள் தொடர்பாக விழிப்புனர்வு அளித்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஓரத்தநாடு வட்டாரம் ஈச்சங்கோட்டை ஊராட்சியில் நடைபெற்று வரும் சிறப்பு தூய்மைப் பணிகளை தொடங்கி வைக்கப்பட்டது என்று மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி காந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Nammuru ,Eichangottai panchayat ,
× RELATED தமிழ் மண்ணின் கலை பண்பாட்டை...