×

காயலான் கடையில் பைக் காப்பர் ஒயர் திருட்டு

கிருஷ்ணகிரி, மார்ச் 22: கிருஷ்ணகிரி காமராஜர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (62). இவர் காயலான் விற்பனை கடை வைத்துள்ளார். கடந்த சனிக்கிழமை மதியம் கடையை பூட்டாமல், கதவை மட்டும் மூடி வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்துக்கு பின் கடைக்கு வந்த போது, கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ₹15 ஆயிரம் மதிப்பிலான காப்பர் ஒயர், ₹45 ஆயிரம் மதிப்பிலான பைக் ஆகியவை திருடு போயிருந்தது. இதுகுறித்து ஆறுமுகம், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதில் கிருஷ்ணகிரி தர்மராஜ கோயில் தெருவை சேர்ந்த காதர்பாஷா, மாணிக்பாஷா ஆகியோர், தான் வீட்டுக்கு சென்ற ேபாது கடையின் அருகே நின்றிருந்தனர். எனவே, அவர்கள் கடையில் இருந்த காப்பர் ஒயர் மற்றும் பைக்கை திருடிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kayalan ,
× RELATED ஊரப்பாக்கம் அருகே காயலான் கடைக்காரர்...