×

அதியமான்கோட்டை ரயில்வே கிராசிங் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

தர்மபுரி, மார்ச் 12: அதியமான்கோட்டை ரயில்வே கிராசிங் மேம்பால பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி அதியமான்கோட்டை ரயில்வே கேட்டில், காலை நேரங்களில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் நெரிசலில் சிக்கி, சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடிவதில்லை.

மேலும், தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்தில் சிக்கியவர்களை, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லவும், மேல்சிகிச்சைக்கு சேலம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் செல்லும் போதும், அதியமான்கோட்டை ரயில்வே கேட்டில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை தவிர்க்க, கடந்த 2017ம் ஆண்டு அதியமான்கோட்டை ரயில்வே கிராசிங்கில், ₹9 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது.

இதனையடுத்து, அதியமான்கோட்டை ரயில்வே கிராசிங் மூடப்பட்டு, கடந்த 3 வருடமாக கலெக்டர் பங்களா வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனிடையே, பாலம் கட்டுமான பணிகள் பாதியில் நின்றது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கிடப்பில் கிடந்த ரயில்வே கிராசிங் மேம்பாலம் கட்டும்பணி, கடந்த மாதம் தொடங்கி, தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. மேம்பால பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Adiyamankottai ,
× RELATED அதியமான்கோட்டை அருகே சிப்காட் அமைக்க...