மதுரை: சாலையில் திரியும் ஆடு மாடுகளால் விபத்து அதிகரிப்பதாகக் கூறி ஐகோர்ட் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைகளில் அதிக அளவில் மாடுகள் திரிவதால் வாகன ஓட்டிகள் பாதிப்பு என மனுதாரர் தெரிவித்தார். கால்நடைகளை சாலைகளில் விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
