தஞ்சாவூர்: தஞ்சாவூர் பூதலூர் அருகே காணாமல் போன 17 வயது சிறுமி, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். கடந்த 30ம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியைக் காணவில்லை என போலீசில் அவரது தாய் புகாரளித்திருந்தார். இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
