சமயபுரம், மார்ச் 18: மண்ணச்சநல்லூர், நொச்சியம் பகுதியில் குறுகலான சாலையை அகலப்படுத்த வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான டூவீலர்கள், கார், அரசு, தனியார் பேருந்துகள், பள்ளி வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்கிறது. இதில் நொச்சியம் பகுதியில் இருந்து மண்ணச்சநல்லூர் பகுதி வரையில் ரோடு தற்போது சுமார் 7.5 மீட்டர் அகல ரோடாக உள்ளது.
