×

மருதூர் சுங்கச்சாவடியில் ரூ.1 லட்சம் பறிமுதல்

 

குளித்தலை, மார்ச் 17: மருதூர் சுங்கச்சாவடியில் நடத்திய சோதனையில் ரூ 1. லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினர் குளித்தலை சட்டமன்ற தொகுதிகளில் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திருச்சி- கரூர் மாவட்ட எல்லையான மருதூர் சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன் தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Tags : Marudhur toll ,Kulithalai ,Tamil Nadu ,
× RELATED 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி கலெக்டர் தகவல்